இரு பெண் காவல்துறையினரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இரு பெண்களால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையை பாணந்துறையில் தடுக்கும் நோக்கில், குறித்த இரு பெண்களையும் கைது செய்யுமாறு கூறி அங்கிருந்த இரு பெண் காவல்துறையினரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி மோசமாகச் செயற்பட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,