Saturday, July 27, 2024
HomeTamilகாவல்துறை அதிகாரி மற்றும் வெளிநாட்டவர்கள் 5 பேர் கைது!

காவல்துறை அதிகாரி மற்றும் வெளிநாட்டவர்கள் 5 பேர் கைது!

தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அரச வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் மற்றும் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட 5 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் கனேடிய மற்றும் பல்கேரிய பிரஜைகள் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களில் பல்கேரிய பிரஜைக்கு கனடா நாட்டு குடியுரிமையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி மீகாதென்ன காவல்துறையில் சேவையாற்றுபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய இரு சந்தேகநபர்களும்,எல்பிட்டி மற்றுமு் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி மென்பொருள் அமைப்பை மாற்றி, இவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாவை திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular