Saturday, July 27, 2024
HomeTamilகூரிய ஆயுதத்தால் தாக்கி மாமியார் பலி!!

கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமியார் பலி!!

வலப்பனை பிரதேசத்தில் மருமகன் தாக்கி, மாமியார்உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (22) மாலை வலப்பனை தெரிப்பெய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், 59 வயதுடைய டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன.

அவ்விடத்தில், மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்விடத்திலே​யே மாமி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதணைக்காக பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்ததுடன் காவல்துறையினர் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular