Saturday, July 27, 2024
HomeTamilகூரிய ஆயுத்தத்தால் தாக்கி ஒருவர் கொலை!

கூரிய ஆயுத்தத்தால் தாக்கி ஒருவர் கொலை!

ஹிக்கடுவை – வேவல பிரதேசத்தில் மகிழுந்தில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்தில் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார்.

காலி – கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல், பின்னர் குறித்த மகிழுந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றதாகவும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular