கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22) அமுல்படுத்தப்படவிருந்த 14 மணி நேர நீர் விநியோகத் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
முன்னதாக, அத்தியாவசிய திருத்தப் பணிகள் நிமித்தம் இன்றிரவு 10 மணி முதல், நாளை (23) மதியம் 12 மணிவரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.