கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் ஹெந்தலை சந்தியில் இருந்து அல்விஸ் டவுன் சந்தி வரை இன்றிரவு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வத்தளை – ஹெந்தலை ரஜமஹா விகாரையின் வருடாந்தர பெரஹர இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இதன்காரணமாகவே, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில், அந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று பாதைகளை உபயோகிக்குமாறு காவற்துறை அறிவுறுத்தியுள்ளது.