Saturday, July 27, 2024
HomeTamilகொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் ஞாயிற்றுக்கிழமை (08) வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை (07) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 4 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் விநியோகிக்கும் நீர்விநியோக குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்ட அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular