Saturday, July 27, 2024
HomeTamilகொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலை காரணமாகவே இந்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை இந்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular