Saturday, July 27, 2024
HomeTamilகொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நாளைய தினம் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவளை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொலன்னாவை நகர சபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular