Saturday, July 27, 2024
HomeTamilகொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) ஒன்பது மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைகளுக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கு நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை மறுதினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இவ்வாறு நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப்பணிகளே நீர் வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular