கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) ஒன்பது மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைகளுக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களுக்கு நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாளை மறுதினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இவ்வாறு நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப்பணிகளே நீர் வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.