சிறிலங்கா பொது ஜன பெரமுன மூலம் நாடாளுமன்றுக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹரித் மற்றும் சுதர்சனி பெர்னாண்டோபிள்ளை, ஆகில நால்வரே ஐக்கிய மக்கள் சத்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இவ்வாறு முன்வந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் வலுவாகவும் கூட்டாகவும் செயற்படுவதற்கு இந்த ஒற்றினைவு மிகவும் முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நீண்டகாலமாக நடத்தப்பட்ட பல கலந்துரையாடல்களின் பிரதிபலனாக இவ்வாறு ஒன்றிணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பலமான சக்தியாக ஐக்கிய மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா இதன் போது தெரிவித்துள்ளார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/11/310835518_1837249863280661_7735756185191048228_n-1024x682-1.jpg)