Saturday, July 27, 2024
HomeTamilசினிமா பாணியில் மருமகனை செய்த கொலை குடும்பம்!

சினிமா பாணியில் மருமகனை செய்த கொலை குடும்பம்!

சீதன பிரச்சனை காரணமாக மருமகனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் தாய் உட்பட 11 பேர் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தி பகுதியில் 30 வயதுடைய (ரவீந்திரன்) அஜித் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தையான இவரே கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த சம்பவம் வாள்வெட்டு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது இல்லை என்றும், முழு குடும்பமே திட்டமிட்டு மருமகனை கொலை செய்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ரவீந்திரம் அஜித் இவர் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்தி வருகின்றார். இவ்வாறு இருக்கும் பொழுது இவர்கள் ஒன்றாகவே கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் சீதனப் பிரச்சனை ஒன்று இடம் பெற்று வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அஜித் மனைவியின் தந்தையுடன் சண்டையிட்டு வந்துள்ளார் இதனையடுத்து மாமனார் மருமகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
தான் ஒரு மாதத்துக்குள் வீட்டை விட்டு வெளியேறுவதாக மருமகன் அஜித் கூறியுள்ளார்.

இன்னிலையில் மாமனார் முருகேசு கார்த்திகேசு மருமகனுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் 21ஆம் திகதி இரவு மருமகன் வீட்டுக்கு சாப்பாடு எடுக்க வரும்பொழுது, தோட்டத்து வெளியில் வைத்து மருமகனை அடியாட்கள் மூலம் தாக்கியுள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை அடித்துடைத்துள்ளனர் தான் யாரால் தாக்கப்பட்டது என அறிந்த அஜித் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு மனைவியை கூப்பிட்டு கதறியவாறு வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்றவர் அழுது புலம்பி எனக்கு அடித்தவர்கள் யார் என்று தெரியும் என கூறியுள்ளார். இது இவ்வாறு இருந்தால் மருமகன் எல்லோரையும் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துவிடுவான் என நினைத்த குடும்பம், கதவினை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையினால் தாக்கியுள்ளனர்.
இளைய மச்சான் மண்வெட்டி பிடியால் அடித்துள்ளதுடன் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றினால் தலையில் தூக்கி போட்டுள்ளனர் குடும்பமாக சேர்ந்து இந்த கொலையினை செய்துள்ளனர்.

அத்துடன் தாங்களாகவே ஆம்புலன்ஸ்க்கு அறிவித்து வீட்டிற்கு வந்த வாள்வெட்டு குழு ஒன்று வந்து தாக்குதல் நடத்தி மருமகனை வெட்டி விட்டு சென்றதாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.மேலும் கொலை இடம் பெற்ற தடயங்களை தெரியாதவாறு அவர்கள் தாங்களாகவே வீட்டு கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சம்பவத்தினை திசை திருப்ப முற்பட்டுள்ளனர்.

அத்துடன் எங்களை வாள்வெட்டு குழு அச்சுறுத்தியதாகவும், நாங்கள் பக்கத்து வேலித் தகரத்தினைபிரித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றதகவும் அதை காட்டுவதற்காக பக்கத்து தகரத்னையும் தாங்களாகவே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.கடந்த நாட்களாக காவல்துறை புலன்விசாரணைகளை மேற்கொண்ட விசாரணைகளை வீட்டில் இருந்து அனைத்து நபர்களையும் தனித்தனியாக விசாரித்த போது திட்டம் போட்டு கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் காவல்துறை காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தடி, இரும்பு கம்பி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ர பிரதி காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கமைய, யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின், ஆலோசனைகள் ஊடாக யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்ச்சகர் மற்றும் சிரேஷ்ர காவல்துறை அதிகாரி அவர்களின் நேரடி கண்காணிப்பில் கோப்பாய் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பிரிவினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular