பொரளை – கொட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடைய முகவர் ஒருவர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த (32) வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு கடந்த மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்திருந்தது.
எவ்வாறாயினும், நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நாட்டிற்கு செல்ல முற்பட்ட போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொள்ளும் முகவராக செயற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.