அடுத்த சிறுபோகத்துக்கு உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும் போகத்துக்கு அவசியமான உரத்தை வழங்குதல் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் வைத்து விவசாய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நெல் உற்பத்திக்கு தேவையான 36 ஆயிரம் மெற்றிக் டன் திண்ம உரத்தை எதிர்வரும் சிறு போகத்துக்கு பெற்று தருவதற்கு யுஎஸ்எய்ட் அமைப்பு இணங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை பெரும்போகத்துக்கான அடிப்படை உரமான ட்ரிப்பிள் சுப்பர் பொசுபேற்று என்ற உரத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உரத்தை உற்பத்தி செய்யும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், யுத்தம் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.