Saturday, July 27, 2024
HomeTamilசீதுவையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

சீதுவையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

சீதுவ, கொட்டுகொட பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

39 வயதான கிஹான் காஞ்சன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிதாரி சுமார் 11 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் கஞ்சி விற்பனை செய்யும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அருகில் இருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கஞ்சி விற்பனை செய்யும் இடத்தில் இருந்த பெண் ஒருவரும் காயமடைந்ததாக கூறப்பட்டது.

பின்னர், காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 39 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular