சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நோக்கில் இந்த அரிசித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.
இந்த அரிசியை விநியோகிக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
சீனாவால், கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரையில், 7 ஆயிரம் மெற்றிக் டன் அரி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.