நேற்றைய தினம் சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் டொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
விரைவில் தேவையுடைய இலங்கை மாணவர்களுக்கு அந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 500 மெட்ரிக் டொன் அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை 6 ஆயிரம் மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.