Saturday, July 27, 2024
HomeTamilசீனாவில் மீண்டும் கொரோனா பரவல்- அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்- அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை!

சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீஜிங்கில் மட்டும் 515 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

சீனாவில் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக பரவுகிறது. தலைநகர் பீஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பீஜிங்கில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் தடை போட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular