இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.