75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
இந்திய நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மத்திய கலாசார நிலைய அங்குரார்ப்பண நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடு பொருளாதார ரீதியில் கடும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இரண்டாவது தடவையாகவும், சுதந்திர கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கான காரணம் என்னவென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.