Saturday, July 27, 2024
HomeTamilஜனாதிபதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்!!

ஜனாதிபதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்திருந்தது.

மன்னார் நகருக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular