Saturday, July 27, 2024
HomeTamilடீசல் தாங்கி விபத்து - ஒருவர் பலி!!

டீசல் தாங்கி விபத்து – ஒருவர் பலி!!

புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று அதிகாலை டீசல் தாங்கி வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

திருகோணமலை 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.பி. துசிந்த (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கம்பளை புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான (6600) லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் தாங்கி சாரதியும், உதவியாளரும் இருந்துள்ள நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புஸல்லாவை வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால், வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையே ,குறித்த தாங்கியில் 13200 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular