Saturday, July 27, 2024
HomeTamilதடம் புரண்டது சமுத்திரதேவி - கரையோர புகையிரத போக்குவரத்து பாதிப்பு!

தடம் புரண்டது சமுத்திரதேவி – கரையோர புகையிரத போக்குவரத்து பாதிப்பு!

சமுத்திரதேவி கடுகதி புகையிரதம் இன்று காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.

இதன் காரணமாக கரையோர புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது, ​​கடற்படை முகாமிற்கு முன்பாக புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

அதன்படி தற்போது கரையோர புகையிரதம் பாதையில் ஒருவழி பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கொழும்பு கோட்டையை நோக்கிப் பயணிக்கவிருந்த இரண்டு புகையிரத சேவைகள் தாமதமடையும் என திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular