வயதான தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று அம்பலாந்தோட்டை – ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவ் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.