Saturday, July 27, 2024
HomeTamilதுப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

சந்தேகநபரின் துப்பாக்கி வவுலுகல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வைக்கோல் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular