கம்பஹா, மாகவிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு முன்னால் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.