பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையே இன்றிரவு பயணிக்கவிருந்த 2 அஞ்சல் தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையே, தொடரூந்து மார்க்கத்தில், மரம் முறிந்து வீழ்த்தமையால், தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொடரூந்து மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.