முச்சக்கர வண்டி ஒன்று இன்று (25) பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கர வண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே முச்சக்கர வண்டியை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியாகாவல்துறையினர், இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.