இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் தற்போது ஒரு லீற்றர் டீசல் 12 ரூபாய் நட்டத்திலேயே விநியோகிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபாய் நட்டத்தில் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை பாராளுமன்றில் இன்று(09) தெரிவித்துள்ளார்.