இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
பூனேவில் இடம்பெறும் இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.