நாளை (31) மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது
நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்கு போதியளவு நீரை வெளியேற்ற நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.
கொத்மலை மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து நீர்த்தேக்கங்களில் இருந்து போதியளவு நீரை திறந்து விடுவதற்கு மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழமுக்கமாக வலுப்பெறுகின்றமை காரணமாக மழை பெய்யும் சாத்தியம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நாளை தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.