நீர்கொழும்பில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
இன்று (23) பிற்பகல் 2.30 மணியளவில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபரும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.