Saturday, July 27, 2024
HomeTamilபடிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

படிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற நபர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு பேருந்தில் சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை முகமாலை இத்தாவில் பகுதியில் பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

அதில் படுகாயமடைந்த நபரை , பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை மாற்றப்பட்டார் எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular