Saturday, July 27, 2024
HomeTamilபலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு!

பலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு!

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்ததாக துருக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,236 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,800 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

அதேவேளை, 2011 ஆம் ஆண்டு ஜப்பான் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20,000 பேர் காவுகொள்ளப்பட்டனர்.

துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய நிலநடுக்கமும் அந்த அளவிற்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் துருக்கி மற்றும் சிரிய மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடூரமான இயற்கை சீற்றம் இதுவென புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular