Saturday, July 27, 2024
HomeTamilபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயம் அடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்யும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

எனினும், முன்னாள் பிரதமருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அவரது கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular