Saturday, July 27, 2024
HomeTamilபாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவு கடமைகளில்!

பாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவு கடமைகளில்!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விநியோகிப்பவர்களை கண்டறிவதற்காக பாடசாலைகளுக்கு அருகில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய சில நாட்களாக பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருட்களை விநியோகிப்பவர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular