நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (12) முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்தார்.
சீரற்ற வானிலையினால் கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.