Saturday, July 27, 2024
HomeTamilபாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்தவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (24) மாலை நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தியேட்டர் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் நிந்தவூர் காவல்துறையினரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular