Saturday, July 27, 2024
HomeTamilபுகையிரத திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி?

புகையிரத திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சி?

புகையிரத பயணங்களை ரத்து செய்து புகையிரத திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக புகையிரத தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே எஸ்.பி.விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு புகையிரத திணைக்களத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தொழிற்சங்கங்கள் அதற்கு வாய்ப்பளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புகையிரத பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதால் புகையிரத பயணிகளுக்கு புகையிரத பயணங்கள் விரக்தியடைந்து விட்டது.

புகையிரத ஊழியர்களை விரக்தியடையச் செய்து தற்போது என்ன நடக்கிறது? அமைச்சர் வாயை திறந்தால் புகையிரத திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பில் குறிப்பிடுகிறார்.

முடிந்தால் புகையிரத அதிகார சபை ஒன்றை நிறுவுங்கள். மறுசீரமைப்பு செய்தால் அதற்கு எதிராக அனைத்து ஊழியர்களையும் திரட்டுவோம் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular