பதுளை கந்தகெட்டிய பகுதியில் 80 இலட்ச ரூபாய் பெறுமதியான பழமையான புத்தர் சிலையுடன் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
புத்தர் சிலையொன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக, கந்தகெட்டிய காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கந்தகெட்டிய காவல் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய, இரண்டு காவல்துறையினர் சிலையை கொள்வனவு செய்யும் நபர்கள் போல் குறித்த வீட்டுக்கு சென்று, சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறிய போது சந்தேக நபர்கள் சிலையை கொடுத்துள்ளனர்.
இதன்போது ஏனைய காவல்துறையினரால் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டதுடன், 46,41,26 வயதுகளையுடைய மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மூவரையும் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.