Saturday, July 27, 2024
HomeTamilபுலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் - மூவர் கைது!

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் – மூவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கல்குடா காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ள அதிரடி நடவடிக்கையின் போதே இவர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் மாட்டிக் கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் 33, 36 வயதுடைய இருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 38 வயதுடைய ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 22 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular