Friday, July 26, 2024
HomeTamilபேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது!

பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது!

எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு சுகாதார அமைச்சு கட்டுபாட்டினை விதித்து வழிகாட்டல் கோவையையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் பயணிகளுக்கான பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

எனினும் குறித்த விதிமுறைகள் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களில் விலை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலையில் உணவக உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்கின்றனர்.

இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை குறைத்து பயணிகள் பேருந்து மூலம் ஜீவனோபாயத்தை முன்னெடுக்கும் தரப்பினர் எவ்வாறு உயிர்வாழ்வது” என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular