Saturday, July 27, 2024
HomeTamil"பேரூந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல" - சரத் பொன்சேகா!

“பேரூந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல” – சரத் பொன்சேகா!

பேரூந்துகளை செலுத்துவதன் மூலமோ, அல்லது பேரூந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரூந்துகளை ஓட்டுவது தலைவர் ஆவதற்கான தகுதி அல்ல.

சஜித் பிரேமதாச, ஒரு பேரூந்தை நன்கொடையாக அளித்து அதை ஓட்டுவதன் மூலம் ஓரளவு திருப்தி அடைய முடியும்.

எனினும் பேருந்துகளை ஓட்டுவதன் மூலமோ அல்லது பேரூந்துகளுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவர் ஆக முடியாது என்று சரத் பொன்சேகா கூறினார்.

இவ்வாறான விடயங்கள் நாட்டின் அரசியல் கலாசாரத்துடன் செல்வதாகவும் இந்த அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular