Saturday, July 27, 2024
HomeTamilபேரூந்து விபத்தில் ஒருவர் பலி- 17 பேர் காயம்!!!

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி- 17 பேர் காயம்!!!

கிளிநொச்சி – பளை பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றே பளை முள்ளியடி பகுதி ஏ – 9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் போட்டிப் போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேரூந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular