சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்கும், கட்டணக்கழிவுடன் திரைப்படங்களை பார்க்கவும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் 50% கட்டணக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.