Saturday, July 27, 2024
HomeTamil“மகிந்தவுடன் எழுச்சி” இடைநிறுத்தம்!!

“மகிந்தவுடன் எழுச்சி” இடைநிறுத்தம்!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்ட “மகிந்தவுடன் எழுச்சி” கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று வலியுறுத்தியதை அடுத்து கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதலில் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து கட்சியை மறுசீரமைத்து பின்னர் கூட்டங்களை நடத்துவதே சிறந்தது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மகிந்தவுடன் எழுச்சி” கூட்டத் தொடர் களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச தலைமையில் நாவலப்பிட்டியிலும் புத்தளத்திலும் கூட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular