அநேகமானோர் அதிகளவான உப்பை சேர்ப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன மக்களை எச்சரித்துள்ளார்.
நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்றது எனவும் நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் இவர்கள் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.