பலபிட்டிய – பட்டபொல, கொபேய்துடுவ பிரதேசத்தில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் 14 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன், மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மடிக்கணினியின் சார்ஜர் வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்ர் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.