இன்று அதிகாலை 28 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் தாங்கிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியில் கொள்வனவு செய்யப்படும் இந்த உரத் தொகையானது, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில், விவசாயிகளுக்கு அவசியமான யூரியா உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக, உலக வங்கியால், 110 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் டன் உரம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.