Saturday, July 27, 2024
HomeTamilமாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் பருத்தித்துறை – நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று (25) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

3 மாவீரா்களின் தாய் ஒருவா் மாவீரா்களுக்கான பொதுச் சுடரினை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியதை தொடா்ந்து, அஞ்சலி நடைபெற்றது.

அதனை தொடா்ந்து மாவீரா்களின் பெற்றோா்கள் கௌரவிக்கப்பட்டு மரக்கன்றுகள், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நினைவு மண்டபத்தை சூழ புலனாய்வாளா்கள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular